நெல்லை, மார்ச். 17–
நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் சீமான் நிருபர்களிடம் கூறியதாவது:–
கடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் கூட்டணியை எதிர்த்து பிரசாரம் செய்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தற்போது முதல்–அமைச்சர் ஜெயலலிதா 3–வது அணி சார்பில் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நாங்கள் முழு ஆதரவு தெரிவிப்போம்.
தற்போதைய தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்த்து பிரசாரம் செய்வோம் என்றார்.
No comments:
Post a Comment